அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நைஜீரியாவில் தீவிரவாதிகளிடமிருந்து மீண்டு வந்த 100 பள்ளி மாணவிகள்! 

நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவிகள் அவர்களிடமிருந்து மீண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:02 pm IST

அபுஜா: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவிகள் அவர்களிடமிருந்து மீண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 

நைஜீரியாவின் யோப் மாவட்டத்தின் டப்ஷி பகுதியில் அரசு கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த மாதம் போகோ ஹரம் தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் அங்குள்ள 100க்கும் அதிகமான மாணவிகளை கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை மீட்பதற்காக நைஜீரிய அரசு பல வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில்  தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவிகள் அவர்களிடமிருந்து டப்ஷி பகுதிக்கு  மீண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன  இத்தகவலை மாணவிகளின் பெற்றோர் உறுதி செய்தனர்.

கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படும் பெற்றோர்கள் குழுவின் தலைவர் பசீர் மான்ஸோ செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, 'கடந்த மாதம் போகோ ஹரம் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட மாணவிகள் புதன் காலை 8 மணியளவில் சுமார் ஒன்பது வாகனங்களில் டப்ஷி பகுதியில் இருக்கும் பள்ளியின் வாசலின் அருகே வந்து இறங்கினர்” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இந்த கடத்தல் சம்பவத்தில் ஐந்து மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.