நான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை!  

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தன்னுடைய நான்கு குழந்தைகளை பெற்ற தந்தை ஒருவரே கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை!  
Published on
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தன்னுடைய நான்கு குழந்தைகளை பெற்ற தந்தை ஒருவரே கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாரா-இ-ஆலம்கிர் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப்(57). இவர் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் ஞாயிறன்று தனது மனைவி வெளியே சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த நான்கு குழந்தைகளையும் கோடரியால் சரமாரியாகத் தாக்கினார். இந்த கொடூரத் தாக்குதலில் அலி ஷான்(14), நாடியா(10), இஷா(9) மற்றும் ஐமென்(8) ஆகிய 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தனர்.

குழந்தைகளின் அலறல் ஓசையை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் முஹம்மது அயூபை  பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த கொடூர கொலைக்கு காரணம் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com