சிங்கப்பூரில் தமிழ்மொழி எப்போதும் ஆட்சிமொழியாக இருக்கும் என்று அந்நாட்டு வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள 4 அதிகாரப்பூர்வ ஆட்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. பள்ளி, கல்லூரிகளில் தமிழ், தாய் மொழியாக கற்பிக்கப்பட்டு வருவதுடன் சிங்கப்பூர் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அந்நாட்டு கரன்சியான டாலரிலும் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. அத்தகைய மரியாதை சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ் மொழி தொடர்ந்து அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியாக இருக்கும் என்றும் தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதிலும் காப்பதிலும் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இளைஞர்கள் தினந்தோறும் அதிகயளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும், இளைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


