பத்திரிகையாளர் கொலை வழக்கில் இளவரசர் சல்மானை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை: சவுதி அமைச்சர் திட்டவட்டம்   

பத்திரிகையாளர் கசோக்கி கொலை வழக்கில் பட்ட இளவரசர் சல்மானை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சவுதி அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 
பத்திரிகையாளர் கொலை வழக்கில் இளவரசர் சல்மானை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை: சவுதி அமைச்சர் திட்டவட்டம்   
Updated on
1 min read

ரியாத்: பத்திரிகையாளர் கசோக்கி கொலை வழக்கில் பட்ட இளவரசர் சல்மானை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சவுதி அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் கொடூரக் கொலை விவகாரம்  உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு குரல்கள் மற்றும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் சவுதி பட்ட இளவரசர் சல்மானுக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.   
 
அதன் காரணமாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நீக்க வேண்டும் என வலுவான கோரிக்கைகள் எழுந்து வருகிறது. 

இந்நிலையில் பத்திரிகையாளர் கசோக்கி கொலை வழக்கில் பட்ட இளவரசர் சல்மானை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சவுதி அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர்  அடேல் அல்-ஜுபேர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை  நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்  அபாயகரமானவை. அப்படி நடப்பதற்கு சாத்தியமேயில்லை. துருக்கி தலைநகர் 
இஸ்தான்புல்லில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கசோக்கியின் கொலையில் சவுதி இளவரசருக்கு எந்த வித பங்கும் இல்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக கசோக்கியின்  கொலையில் சல்மானுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்ததற்கு மறுநாளே இத்தகைய மறுப்பு சவுதிஅமைசசர் ஒருவரிடம் இருந்து வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com