ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் உள்ள சுற்றுலா தீவில் அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் வெட்டவெளியாக உள்ள இடத்தில் தஞ்சமடைந்தனர்.
உயிர்ச் சேதமோ, பெரிய அளவிலான பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.