வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஹொக்கைடோ தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :26 அக்டோபர் 2018, 4:58 am

DIN


டோக்கியோ: ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஹொக்கைடோ தீவின் ராவுசு பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஹொக்கைடோ தீவு பகுதியில் உள்ள ராவுசு நகரங்களில் நன்கு உணரப்பட்டது. இதையடுத்து, அந்நகர குடியிருப்பு வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயந்து ஓடினர். 

ஒரு மாதத்துக்கு முன்புதான் 6.7 அலகுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு அங்கு 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் காரணமாகவே அங்கு பதற்றம் அதிகமாகவே தொற்றிக் கொண்டது. 

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர் அல்லது காயமுற்றவர் குறித்து இதுவரை தகவல் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.