ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை இல்லை: பாகிஸ்தானுக்கு ரூ 2000 கோடி உதவித் தொகையை ரத்து செய்த அமெரிக்கா 

தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கான ரூ 2000 கோடி உதவித் தொகையை ரத்து செய்வது என்று அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2018, 9:33 am

DIN

வாஷிங்டன்: தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கான ரூ 2000 கோடி உதவித் தொகையை ரத்து செய்வது என்று அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலாவதாக கடந்த வருடம் ஆகஸ்டில் டிரம்ப் புதிய தெற்காசிய கொள்கையை வெளியிட்டார்.  அதில் அந்த பிராந்தியத்தில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி பாகிஸ்தானைக் கேட்டு கொண்டார்.

தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலீபான் குழுக்கள் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் ஆகிய தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தானில் புகலிடம் அளித்து, அவர்களுக்கு எதிராக எந்தவிட நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, இந்த வருடம் ஜனவரியில் பாகிஸ்தானின் பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவதற்காக வழங்க இருந்த 115 கோடி அமெரிக்க டாலர் உதவித் தொகையும்  ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கான ரூ 2000 கோடி உதவித் தொகையை ரத்து செய்வது என்று அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

முன்னரே அறிவித்திருந்த அமெரிக்காவின் தெற்காசிய கொள்கைக்கு ஆதரவான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.