வங்கதேசத்தில் பெண் செய்தியாளர் படுகொலை தொடர்பாக அவரது மாமனாரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து டாக்கா டிரிபியூன்' நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செய்தியாளர் சுபர்ணா அக்தர் நோடி (32) படுகொலை தொடர்பாக, அவரது முன்னாள் மாமனாரும், தொழிலதிபருமான அபுல் ஹுசைனை போலீஸார் கைது செய்தனர்.
தற்போது அவர் பாப்னா மாவட்ட நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சுபர்ணாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.
தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த சுபர்ணா அக்தர் நோடி, பவ்னா மாவட்டத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் சுமார் 12 மர்ம நபர்களால் கடந்த வாரம் வெட்டிக் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் சீர்திருத்தக் கருத்துகளைக் கூறி வரும் ஊடகவியலாளர்கள் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்படுவது அடிக்கடி நடந்தாலும், இந்தக் கொலைக்கு சுபர்ணாவிடமிருந்து பிரிந்து வாழும் அவரது கணவரின் குடும்பத்தினர் காரணமாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


