

வாஷிங்டன்: உங்கள் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு வரும் கடிதங்களை 3வது நபர்களான ஆப் நிறுவனங்கள் படிக்க கூகுள் அனுமதி அளித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிஎன்என்மணி (CNNMoney) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜிமெயில் மின்னஞ்சல் சேவைக்குள் 3ம் நபர்களான ஆப்களை ஊடுருவ கூகுள் அனுமதி அளித்திருப்பதாகக் கூறுகிறது.
அமெரிக்க அரசுக்கு கூகுள் அனுப்பியிருக்கும் கடிதத்தின் வாயிலாக இந்த தகவல் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பயனாளர்களின் மின்னஞ்சல் பயன்பாட்டை வைத்தே, கூகுள் நிறுவனம் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதாகவும் கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.