நியூயார்க்: கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் நடந்தது. இறுதியில் விடுதலைப்புலிகள் ராணுவத்தால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டனர். இந்த உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் லட்சக்கணக்கான தமிழர்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா.சபையின் பொது அவைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
2009-ம் ஆண்டில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்டப் போர் உச்ச கட்டத்தில் இருந்தது. அப்போது விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலுக்கு அஞ்சி முன்னாள் அதிபர் ராஜபட்ச மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர் எங்குச் சென்றார்கள் எனத் தெரியவில்லை. நாட்டுக்குப் பாதுகாப்புத்துறைக்கு என தனிச் செயலாளர் இல்லை என்பதால் நான்தான் பாதுகாப்புத்துறையை கூடுதலாகக் கவனித்துவந்தேன்.
அதிலும் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதத்தின் கடைசி இரு வாரங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தீவிரமாக இருந்தது. அப்போது அவர்கள் அமைச்சர்களின் வீடுகளையும், அமைச்சர்களையும் குறிவைத்து தாக்க உள்ளனர் என்பதால் நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் நாட்டை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தேன். இது இதுவரை யாருக்கும் வெளியில் தெரியாத ரகசியம்.
விடுதலைப்புலிகளில் தங்களது 'வான்புலிகள்' படை மூலம் கடந்த 2007-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தைத் தாக்கி இருக்கிறார்கள். இந்த முறையும் தாக்குவார்கள் எனத் தெரியும்.
2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்தோ அல்லது வேறுஏதோ அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்தோ விமானம் மூலம் கொழும்பு நகரை விடுதலைப்புலிகள் தாக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
கொழும்பு நகரில் விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என்பதால், நான் நகரைவிட்டு வெளியிடத்தில் இருந்து நிலவரங்களைக் கவனித்தேன்.
இவ்வாறு அதிபர் சிறீசேனா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

90’ஸ் விஜய்!

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



