போர் பதற்ற எதிரொலியை அடுத்த சில மாதங்களில் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈரான் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைஸல் கூறுகையில், ஈரான் நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செல்கிறார். பயண விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
பிப்ரவரி 13-ஆம் தேதி ஈரானில் நடைபெற்ற ஜெய்ஷ்-அல்-அதல் பயங்கரவாத அமைப்பின் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் 27 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இஸ்லாமாபாத் தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியது.
மேலும் கடந்த சில வருடங்களாக ஈரானில் ஜெய்ஷ்-அல்-அதல் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இவ்விரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பின், ஈராக் நாட்டுக்கு முதன்முறையாக செல்கிறார்.
ஜெய்ஷ் அல்-அதல் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு

பைக்கில் தவறி விழுந்து தாய் உயிரிழப்பு: மகன் பலத்த காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


