உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

அமெரிக்காவில் யூத வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.

Published On :31 ஜனவரி 2024, 1:16 pm IST

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள போவே நகரில் யூத மத கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில், நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் ஊழல் பேலிமர் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார்.  காயமடைந்தவர்களில் இளம்பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் அடங்குவர். 

அதிர்ச்சியளிக்கும் இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது ஜான் எர்னஸ்ட் (வயது 19) என்னும் வாலிபர் என்று தெரிய வந்துள்ளது. அவன் ஏ.ஆர். 15 ரக துப்பாக்கியை இதற்காக பயன்படுத்தி உள்ளான். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்துள்ள பல துப்பாக்கி சூடு சம்பவங்களில் இந்த ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வாலிபன் எர்னஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.