நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பாகிஸ்தானில் சேதப்படுத்தப்பட்ட இந்திய மன்னர் சிலை: காஷ்மீருக்கு பதிலடியா? 

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :11 ஆகஸ்ட் 2019, 5:09 pm IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் வடமேற்கு பகுதியை  ஆட்சி செய்தவர் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்.இவர் 1839 ஆம் ஆண்டு லாகூரில் மரணம் அடைந்தார்.  இவரது 180-வது பிறந்த தினத்தின் போது இப்போதைய பாகிஸ்தானின் லாகூர் துறைமுகத்தில் 9 அடி உயரம் கொண்ட அவரது சிலை திறக்கப்பட்டது. குதிரை மீது , கையில் வாளுடன் அமர்ந்து இருக்கும் வகையில் அந்த சிலையானது வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலை சனிக்கிழமையன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரசியல் சட்டப் பிரிவு 370-ன் வாயிலாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான்  ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சேதப்படுத்தப்பட்ட சிலையை மறுசீரமைப்பு செய்வோம் என்று லாகூர் நகர ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.