ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சோமாலியாவில் 40 அல் - ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 

சோமாலியாவில் தெற்குப் பகுதியில் 40 அல் - ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2019, 11:55 am

மொகாதிசு: சோமாலியாவில் தெற்குப் பகுதியில் 40 அல் - ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

சோமாலியாவின் அரசு படைப்பிரிவான, தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படையானது, அந்நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அல் - ஷபாப் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி வரும் அல் - ஷபாப் இயக்கத்திற்கு அல் காய்தா அமைப்பினரின் ஆதரவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.     

அல் - ஷபாப் இயக்கத்தினர் திங்களன்று சோமாலியாவின் தலைநகரான மொகாதிசுவில் அமைந்துள்ள வணிக வளாகமொன்றில் கார் குண்டுத் தாக்குதல்நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் சோமாலியாவில் தெற்குப் பகுதியில் 40 அல் - ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தெற்கு சோமாலியாவில் உள்ள கீழ் ஷாபெல்லே பகுதியில் உள்ள பார்சோலே கிராமத்தில் சனிக்கிழமையன்று அல் - ஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் 40 அல் - ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.