மியாமி: அமெரிக்காவில் உள்ள வங்கியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடங்களிலேயே உயிரிழந்தனர்.
தென் அமெரிக்காவின் புளோரிடாவில் செப்ரிங் என்ற நகரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றிற்குள் புகுந்த இளைஞர்(21) ஒருவர், திடீரென தன்னிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து, வங்கிக்குள் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டான். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த இளைஞனை சரணடையுமாறு கூறினர். அந்த இளைஞன் மறுக்கவே, அதிரடியாக வங்கிக்குள் நுழைந்த போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் ஜேபின் சேவியர் என்றும், அவரிடம் கொலைக்கு எதுவும் பிண்ணனி காரணம் இருக்கிறதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில், துப்பாக்கி வன்முறைகள் ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் துப்பாக்கி வன்முறையால் 40 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.