அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதி தீப்பிடித்து விபத்து: 10 பேர் பலி
அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பரிதாபமாக பலியானார்கள்.


நியூயார்க்: அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் இருந்து புளோரிடாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று திங்களன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 8 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 10 பேர் இருந்தனர்.
ஓடுபாதையில் இருந்து விமானம் கிளம்பி மேல் நோக்கி எழும்ப முற்பட்ட போது திடீரென அதன் என்ஜின் பழுதானது. இதன் காரணமாக விமானமானது தரையில் இருந்து 200 அடி உயரத்துக்கு மேல் பறக்க முடியாமல் திணறியது.
கடும் சிரமத்திற்கு இடையில் விமானிகள் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்க முற்பட்ட போது விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே அருகிலுள்ள கட்டிடத்தின் மீது மோதியது. இதில் விமானம் வெடித்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...