மனிதனை விட உருவத்தில் மிகப்பெரிய ஜெல்லி மீன்கள் கண்டுபிடிப்பு

ஆழ்கடலில் மூழ்கி அரிய அதிசயங்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு ஜாக் பாட் பரிசு அடித்துள்ளது என்றே சொல்லலாம்.
மனிதனை விட உருவத்தில் மிகப்பெரிய ஜெல்லி மீன்கள் கண்டுபிடிப்பு
Updated on
1 min read


ஆழ்கடலில் மூழ்கி அரிய அதிசயங்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு ஜாக் பாட் பரிசு அடித்துள்ளது என்றே சொல்லலாம்.

ஆம், இங்கிலாந்தின் தென் மேற்கு கடற்பகுதியில் கடல் ஆராய்ச்சியாளர்கள் மிகப்பெரிய ஜெல்லி மீனைக் கண்டுபிடித்துள்ளனர். இது உருவத்தில் மனிதனை விடவும் மிகப் பெரியதாகக் காணப்படுகிறது.

இதுவரை கடல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஜெல்லி மீன்களை விடவும் இது மிக மிகப் பெரியதாக அமைந்துள்ளது.

ஜெல்லி மீன்களில் மிகச் சிறிய மீன்களும், மிகப் பெரிய மீன்களும் காணப்பட்டாலும், இதுவரை இவ்வளவு பெரிய ஜெல்லி மீன்களை யாரும் கண்டதாகப் பதிவு செய்யப்படவில்லை.

இதன் நீளம் 90 செ.மீ., அகலம் 40 - 90 செ.மீ. இதன் எடை 35 கிலோ, 8 கைகளுடன் காணப்படுகிறது.

இது மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தரும் மீன் வகையாக இல்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com