

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.
2019 உலகக் கோப்பை போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஹோம் அண்ட் அவே அடிப்படையில் வேறு சீருடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐசிசி புதிய விதிமுறையை அமல்படுத்தியது. இதில் இந்த உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து அணிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் ஒவ்வொரு அணியும் தாங்கள் பயன்படுத்தும் சீருடையை தெரிவிக்க வேண்டும் எனவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் 30-ஆம் தேதி எட்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்த சீருடையை அணிந்து இந்திய அணி விளையாடுகிறது.
யூனிசெஃப் அமைப்பின் ''குழந்தைகளுக்கு ஒரு நாள்'' எனும் சமூக சேவை திட்டத்துக்கு ஆதரவு அளித்து சிறப்பிக்கும் விதமாக இந்திய அணி இந்த புதிய சீருடையை பயன்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.