சிலியில் தொடரும் வன்முறை: அவசரநிலை பிரகடனம்

சிலி நாட்டில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து, போராட்டம், வன்முறை வெடித்துள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
சிலியில் தொடரும் வன்முறை: அவசரநிலை பிரகடனம்
Published on
Updated on
1 min read

சிலி நாட்டில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து, போராட்டம், வன்முறை வெடித்துள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

தென் அமெரிக்க நாடான சிலியில், சான்டியாகோ நகரில், மெட்ரோ ரயில் சேவை நடந்து வருகிறது. இது, 140 கி.மீ., தொலைவுக்கு இயக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில், மிகப்பெரிய மற்றும் நவீனமான மெட்ரோ ரயில்வே நெட்வொர்க் இது. இந்த ரயில் சேவையை அதிகளவிலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

சர்வதேச அளவில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை அடுத்து, மெட்ரோ ரயில் கட்டணத்தை சிலி அரசு அதிகரித்தது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வன்முறை, தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. 12 மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் தாக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டன. 16 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து, அதிபர் செபாஸ்டின் பினேரா, அவசர நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டார்.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பை ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தலைவராக மேஜர் ஜெனரல் ஜாவியர் இட்டுரியாகாவை நியமித்து, அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com