புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இந்தியாவை அழிக்க எங்களிடம் 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் உள்ளன: அதிர வைத்த பாகிஸ்தான் அமைச்சர் 

இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தை அழிக்க எங்களிடம் 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் உள்ளன என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2019, 12:10 pm

IANS

இஸ்லாமாபாத்: இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தை அழிக்க எங்களிடம் 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் உள்ளன என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் நன்கானா சாஹிப் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே நிலையமொன்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இந்தியாவில் குறிப்பிட்ட எந்த ஒரு இடத்தையும் தாக்கி அழிக்க வல்ல 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் எங்களிடம்  உள்ளன.

மோடியின் சிந்தனைகள் என்பது காந்தி மற்றும் நேருவின் சிந்தனைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன.

இந்தியா இரண்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்துள்ளது. பாகிஸ்தான் இதுபோலச் செய்யாது என்ற எண்ணத்துடன் அணுகுண்டு சோதனைகளை செய்தது முதல் தவறு.

அதேபோல் காஷ்மீர் மக்கள் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இரண்டாவது தவறு.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.