போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

அரசு மரியாதையுடன் வரவேற்பு: நரேந்திர மோடி, விளாதிமீர் புதின் சந்திப்பு

அங்கு கூடியிருந்த இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News image
Updated On :4 செப்டம்பர் 2019, 5:05 am

DIN

கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ரஷியாவின் விளாதிவோஸ்டாக் நகரில் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பின் பேரில் மோடி அந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.  ரஷியாவின் தூரக் கிழக்கு மண்டலத்துக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை.  

இந்நிலையில், செப்டம்பர் 4-ஆம் தேதி காலை ரஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு மரியாதை வழங்கி வரவேற்றனர். பின்னர் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இருவரும் இணைந்து ஸ்வெஸ்டா கப்பல் கட்டுமானத்தளத்தை பார்வையிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.