சீனாவில் சிஆன் நகரில் 7-வது சர்வதேச தேயிலைப் பொருள்கள் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இந்தப் பொருள்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்து வாடிக்கையாளர்களுக்குச் சேவை ஆற்றின.
இப்பொருள்காட்சிக்கு வந்த வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில், பல்வேறு விலங்குகளின் வடிவில் சிற்றுண்டிகள் தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு