கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

சீனாவில் உருவாக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை அந்த நாட்டின் லாங் மார்ச்-4பி ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது.

News image
Updated On :12 செப்டம்பர் 2019, 7:13 pm

DIN


சீனாவில் உருவாக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை அந்த நாட்டின் லாங் மார்ச்-4பி ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது.
இதுகுறித்து சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:
ஷாங்க்ஸி மாகாணத்திலுள்ள தையுவான் ஏவுதளத்திலிருந்து 3 செயற்கைக்கோள்களுடன் லாங் மார்ச்-4பி ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
அந்த 3 செயற்கைக்கோள்களில் ஒன்றான இஸட்ஒய்-1 02டி, சீன விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். பிற செயற்கைக்கோள்களுடன் தகவல் இணைப்பை ஏற்படுத்தி, பூமியிலுள்ள வள 
ஆதாரங்களைக் குறித்த துல்லியமான தகவல்களை இஸட்ஒய்-1 02டி செயற்கைக்கோள் பெற்றுத் தரும்.
பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர்ப்புற கட்டமைப்பு, போக்குவரத்து ஆகிய துறைகளுக்குத் தேவையான பல்வேறு தகவல்களைப் பெறுவதற்கு இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும்.
அதனுடன் மேலும் இரு சிறியவகை செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-4பி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.