

உலக நாடுகளில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்த 4வது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கரோன பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்ட 4வது நாடானது பிரான்ஸ்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பிரான்ஸில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 20,265 ஆகவும் உள்ளது.
இதுவரை அந்த நாட்டில் கரோனா பாதித்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரமாக உள்ளது. அங்கு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை எட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.