தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நியூஸ் கார்ப் தலைமைக் குழுவில் இருந்து பதவி விலகினார் ஜேம்ஸ் முர்டோச்

நியூஸ் கார்ப் தலைமைக் குழுவில் இருந்து ஜேம்ஸ் முர்டோச் பதவி விலகியதாக ஊடக நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
நியூஸ் கார்ப் தலைமைக் குழுவில் இருந்து பதவி விலகினார் ஜேம்ஸ் முர்டோச்
Updated On :1 ஆகஸ்ட் 2020, 11:06 am

DIN


நியூஸ் கார்ப் தலைமைக் குழுவில் இருந்து ஜேம்ஸ் முர்டோச் பதவி விலகியதாக ஊடக நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

நியூஸ் கார்ப்-பின் தலையங்க உள்ளடக்கம் தொடர்பான கருத்து வேறுபாட்டினால், தலைமைக் குழுவில் இருந்து ஜேம்ஸ் முர்டோச் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.

ராபெர்ட் முர்டோச் உருவாக்கிய ஊடக சாம்ராஜ்ஜியத்துடன் அவரது இளைய மகனான ஜேம்ஸ் முர்டோச் கொண்டிருந்த கடைசி தொடர்பும் இதன் மூலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸின் மூத்த சகோதரர் லாச்லன் போக்ஸ் கார்ப்பரேஷனுக்கு தலைமை வகித்து வருகிறார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை ஜேம்ஸ் முர்டோச் எழுதிய பதவி விலகல் கடிதத்தில், நியூஸ் கார்ப் நிறுவனத்தின் செய்திகளில் வெளியாகும் தகவல்கள் மற்றும் அந்நிறுவனம் எடுத்த பிற கொள்கை முடிவுகளில் முரண்பட்டிருப்பதால், நிறுவனத்தில் இருந்து விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முர்டோச் குடும்பத்தின் இதர ஊடக நிறுவனங்களாக போக்ஸ் கார்ப் உள்ளது. இது போக்ஸ் நியூஸ் மற்றும் போக்ஸ் ஒளிபரப்பு குழுவின் பேரன்ட் நிறுவனமாகும். 

47 வயதாகும் ஜேம்ஸ் முர்டோச், 88 வயதாகும் ராபெர்ட் முர்டோச்சின் 4வது பிள்ளையாவார். நியூஸ் கார்ப் நிறுவனத்தை நிறுவிய ராபெர்ட் முர்டோச் மிகப்பெரிய கோடீஸ்வரர்.  இவரது மூத்த மகன் லாச்லன் முர்டோச் (48), ராபெர்ட் முர்டோச்சின் வெளிப்படையான வாரிசாகக் கருதப்படுகிறார்.

சகோதரர்கள் இருவருக்கு இடையே இருக்கும் கருத்துவேறுபாடே, இந்த பதவிவிலகலுக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.