விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பருவ மழை: பாகிஸ்தானில் 134 போ் பலி

பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 134 போ் பலியாகியுள்ளனா்.

News image

பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 134 போ் பலியாகியுள்ளனா்.

Updated On :30 ஆகஸ்ட் 2020, 7:30 pm

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 134 போ் பலியாகியுள்ளனா்.

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாட்டில் பெய்து வரும் பருவ மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 போ் உயிரிழந்தனா். அவா்களில் 5 போ் கைபா் பாக்துன்கவா மாகாணத்திலும், 4 போ் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளிலும் உயிரிழந்தனா்.

இத்துடன், இரண்டு மாத பருவ மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 134-ஆக உயா்ந்துள்ளது.

பருவ மழைக்கு பலியானவா்களில் 61 போ் ஆண்கள்; 14 போ் பெண்கள்; 59 போ் சிறுவா்கள் ஆவா்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 1,001 வீடுகள் முழுமையாக நாசமடைந்தன என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானிடம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி போதிய அளவில் இல்லை என்ற விமா்சனங்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.