புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிரேசிலில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது: 17 பேர் பலி

பிரேசிலில் 115 அடி உயர பாலத்திலிருந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். 

News image
Updated On :5 டிசம்பர் 2020, 4:36 pm

DIN

பிரேசிலில் 115 அடி உயர பாலத்திலிருந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். 
பிரேசிலின் தென்கிழக்கு மாகாணமான மினாஸ் ஜெராய்ஸில் 40 பேருடன் சுற்றுலாப் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. ஜோவா மோன்லேவாட் எனுமிடத்தில் 115 அடி உயரப் பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழே விழுந்தது. 
இந்த விபத்தில் 17 பேர் பலியானார்கள். 23 பேர் படுகாயமடைந்தனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.