அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிலவுப் பாறைகளுடன் பூமிக்குப் புறப்பட்டது சீன விண்கலம்

நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலம், அங்கிருந்து பாறைகள் மற்றும் பிற பொருள்களுடன் பூமியை நோக்கிப் புறப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 2:46 am

DIN

நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலம், அங்கிருந்து பாறைகள் மற்றும் பிற பொருள்களுடன் பூமியை நோக்கிப் புறப்பட்டது.

இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சாங்கி-5 விண்கலத்தின் பாதை பூமியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது.

அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப் பாதை பூமியை நோக்கித் திரும்பியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவிலிருந்து கற்கள், பாறைகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சீனாவின் சாங்கி-5 விண்கலம், கடந்த மாதம் 24-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா நிறைவேற்றி வருகிறது.

கடந்த 1-ஆம் தேதி நிலவில் சாங்கி-5 ஆய்வுக்கலம் பத்திரமாகத் தரையிறங்கியது. அங்கு கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்த அந்த ஆய்வுக் கலம் நிலவுப் பரப்பிலிருந்து 3-ஆம் தேதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக் கொண்டிருந்த விண்லத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.