ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கனடா வந்தடைந்தது கரோனா தடுப்பூசி

கனடாவுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

News image
விமானத்தில் கனடா வந்தடைந்த முதல் கரோனா தடுப்பூசி தொகுப்பு.
Updated On :15 டிசம்பர் 2020, 1:13 am

DIN

டொரொன்டோ: கனடாவுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட கரோனா தடுப்பூசி புகைப்படங்களை அவர் சுட்டுரையில் பதிவிட்டு கூறியுள்ளதாவது:

தடுப்பூசி கிடைக்கப் பெற்றது மகிழ்ச்சியான செய்தி; அதே வேளையில், கரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை என்பதால் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

குடிமக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும், அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், அரசின் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஃபைஸர்} ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு கனடா சுகாதார ஒழுங்காற்று அமைப்பு அண்மையில் அனுமதி அளித்தது. 

இந்தத் தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள 14 விநியோக மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுமார் 30 ஆயிரம் தடுப்பூசிகள் கனடாவுக்கு திங்கள்கிழமை வந்துசேர உள்ளன. 

ஃபைஸர்-பயோஎன்டெக் நிறுவனங்களுடன் கனடா அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் அண்மையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால் டிசம்பர் இறுதிக்குள் 2 லட்சத்து 49 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும்.
இதுதவிர 6 மருந்து நிறுவனங்களுடன் கனடா அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தற்போது, மேலும் மூன்று தடுப்பூசிகளைப் பரிசீலித்து வருவதாகவும், இதில் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு சுகாதாரத் துறையினர் விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடா மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைவிட கூடுதலாகப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு அன்பளிப்பாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.