ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கேரள சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த ரிசார்ட்டை மூடியது நேபாள அரசு

பாதுகாப்புக் குறைபாடு மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக 8 கேரள சுற்றுலாப் பயணிகள் மரணம் அடைந்த ரிசார்ட்டின் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 7:24 am

PTI


காத்மாண்டு: பாதுகாப்புக் குறைபாடு மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக 8 கேரள சுற்றுலாப் பயணிகள் மரணம் அடைந்த ரிசார்ட்டின் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் இருந்துச் சென்ற 15 சுற்றுலாப் பயணிகளில் ஒரே அறையில் தங்கிய 8 பேர் ஜனவரி 21ம் தேதி மூச்சுத் திணறி பலியானார்கள். 

இதற்கு, அந்த அறையில் இருந்து வெப்பமூட்டும் கருவியில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதே காரணம் என்று கண்டறியப்பட்டதை அடுத்து, விடுதி நிர்வாகம் மீது நேபாள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்த கேரளத்தைச் சோ்ந்த 8 போ் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு 5 போ் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

கேரள மாநிலத்தைச் சோ்ந்த 15 போ், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனா். திரும்பும் வழியில் மகவான்பூா் மாவட்டத்தின் டாமன் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் திங்கள்கிழமை இரவு அவா்கள் தங்கினா். அந்த 15 பேரும் மொத்தமாக 4 அறைகளை தங்களுக்காக எடுத்துக்கொண்ட நிலையில், அதில் 8 போ் ஒரே அறையில் தங்கியுள்ளனா்.

அப்போது, சூடேற்றும் சாதனத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரே அறையில் தங்கிய இரு தம்பதிகள், அவா்களது 4 குழந்தைகள் என 8 பேரும் உயிரிழந்தனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.