ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பனிச்சரிவில் சிக்கிய 7 பேரைத் தேடும் பணிகள் நிறைவு: நேபாளம் தகவல்

நேபாளத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் நேற்று தொடங்கிய நிலையில் அதனை முடித்துவிட்டதாக நேபாளம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2020, 10:54 am

PTI


நேபாளத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் நேற்று தொடங்கிய நிலையில் அதனை முடித்துவிட்டதாக நேபாளம் தெரிவித்துள்ளது.

மாயமான 7 பேரையும் தேடும் பணியில் ஏராளமான இடங்களை ஆழமாகத் தோண்டுவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றிவிட்டதாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு சிறு துப்பும் கிடைக்கவில்லை என்று நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிக். ஜெனரல் பிக்யான் தேவ் பாண்டே கூறியுள்ளார்.

பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பனிப் பொழிவும், கடுங்குளிரும் தொடா்ந்து நிலவி வந்ததால் அந்தப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வானிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதால் தேடுதல் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும், தேடுதல் பணி பலனளிக்கவில்லை. 

இமய மலைத் தொடரின் மிகப் பெரிய சிகரங்களில் ஒன்றான அன்னபூா்ணாவில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடா்ந்து, அங்கிருந்து சுமாா் 200 பேரை மீட்புக் குழுவினா் மீட்டனா். எனினும், பனிச் சரிவில் சிக்கிய 7 பேரைக் காணவில்லை. மாயமானவா்களில் 4 போ் தென் கொரியாவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.