பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள்.
சிந்து மாகாணம், கோட்டவின் மார்க்கெட் பகுதியில் கார் ஒன்றை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் இன்று நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவல்அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.