47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரான், இந்தியா இடையே நாளை முதல் சிறப்பு விமானங்கள் இயக்கம்: ஈரான் தூதரகம்

ஈரான், இந்தியா இடையே நாளை முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஈரான தூதரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 மார்ச் 2020, 5:11 pm

DIN


ஈரான், இந்தியா இடையே நாளை முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஈரான தூதரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஈரான் தூதரக அலுவலர் தெரிவித்ததாவது:

"இந்தியாவில் உள்ள ஈரான் நாட்டினரை தெஹ்ரானுக்கு அழைத்துச் செல்ல தில்லிக்கு நாளை காலி விமானம் அனுப்பப்படவுள்ளது. மேலும், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கான உபகரணங்களை எடுத்துச் செல்ல மேலும் ஒரு விமானம் நாளை மறுநாள் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளது.

ஈரான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சிறப்பு விமானங்கள் நாளை முதல் இயக்கப்படவுள்ளது. ஈரானில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவின் முறையான அனுமதி பெற்ற பிறகே அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள்" என்றார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3513 ஆக உள்ளது. இதில், இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.