

டெஹ்ரான்: கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
ஈரான் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு கரோனா வைரஸ் பரவினால், இழப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக, சிறைகளில் இருக்கும் சுமார் 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.
இது குறித்து ஈரான் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைஸி கூறுகையில், பொது மக்களின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற நிலையில்தான் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஒரு வேளை பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இவர்கள் மீண்டும் சிறைக்குக் கொண்டு வரப்படுவார்கள். இந்த விடுதலை என்பது தற்காலிகமானதுதான் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,161 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 237 ஆகவும் உயர்ந்ததை அடுத்து, அந்நாட்டு நல்வாழ்வுத் துறை அமைச்சர் அலிரேஸா வஹாப்ஸதேஹ் அளித்த பரிந்துரையை ஏற்று நீதித் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.