ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், வணிக வளாகங்கள், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வழக்கமான விஷயமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், இன்று ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலை மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ளனர்.
விமான நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த மின்னஞ்சல் காரணமாக, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முழுமையான சோதனை நடத்தப்பட்டது, அதில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை.
பின்னர், அந்த மிரட்டல் மின்னஞ்சல் ஒரு பொய்யானது எனத் தெரியவந்ததாக காவல்துறை அதிகாரி கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஹைதராபாத் விமான நிலையம் இன்று காலை பரபரப்பாகக் காணப்பட்டது.
Summary
A bomb threat email sent to the Rajiv Gandhi International (RGIA) Airport here on Monday triggered a security alert, but was later declared a hoax, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











