ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்: ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெறுவோம்  என்று  முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.  

News image
ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்
Updated On :7 நவம்பர் 2020, 8:27 am

DIN

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெறுவோம்  என்று  முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்காவில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நான்காவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இதனிடையே பெரும்பாலான மாகாணங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், அதிபர் தேர்தல் போட்டியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார். 

ஆட்சியைப் பிடிக்க தேர்தல் அவையில் 270 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், 300 இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதுவரை 74 மில்லியன் வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இந்த அளவிலான வாக்குகளை எந்த வேட்பாளரும் பெற்றதில்லை என்றும் குறிப்பிட்டார்.

பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பிடனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில் இதுவரை எண்ணப்பட்ட 9,288 நேரடி வாக்குகளில் ஜோ பிடன் 7,300 வாக்குகளையும், அதிபர் டிரம்ப் 1,875 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இனி எண்ணப்படும் தபால் வாக்குகளின் அடிப்படையில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாகவும், பாதுகாப்புத் தன்மையுடனும் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்குப் பெட்டிகளுக்கு பல்வேறு படிநிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையால் மறு வாக்கு எண்ணிக்கை முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.