அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தின் அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வருவதை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அருகே துப்பாக்கியுடன் வலம்வந்த நபரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.
வர்ஜீனியா பகுதியை சேர்ந்த அந்த நபருக்கு சொந்தமான வாகனத்தில் ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் காவலர்கள் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையை வர்ஜீனியா அரசு அவருக்கு வழங்கவில்லை என்பது தெரியவந்தது.
அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!

கடக ராசியா? தினப்பலன்கள்!

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

