ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஜெர்மனியில் அதிகரிக்கும் கரோனா: இன்று 5,132 பேருக்குத் தொற்று

ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,132 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

Germany reports 5,132 new Covid cases, tally at 334,585

Updated On :14 அக்டோபர் 2020, 6:26 am

ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,132 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினசரி பாதிப்பு தொடர்பாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ)புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது, 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 5,132 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,34,585 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நோய்த் தொற்று பாதித்து 43 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 9,677 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.