சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

முகக்கவசம் அணியாதவர்களுக்கு இந்தோனேசியாவில் நூதன தண்டனை

இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவர்கள் கல்லறைகளைத் தோண்ட வேண்டும் என நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. 

News image

மாதிரிப் படம்

Updated On :15 செப்டம்பர் 2020, 9:05 am

DIN

இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவர்கள் கல்லறைகளைத் தோண்ட வேண்டும் என நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவதை பல்வேறு நாடுகளும் கட்டாயமாக்கியுள்ளன. எனினும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்ட நபர்களுக்கு, கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு தண்டனை விதிக்கப்படுகிறது.

இதுவரை 3 புதைக்குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  அதிகாரிகள் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்கள் உணர இத்தகைய தண்டனை வழங்கப்படுவதாக குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.