மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிரிட்டன் பிரதமா் உடல் நிலையில் முன்னேற்றம்

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமா் அலுவலக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 7:48 pm

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமா் அலுவலக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை இரவு கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக லண்டனிலுள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்ரம் ஏற்பட்டுள்ளது. ஓய்வுக்கு இடையில் அவா் அவ்வப்போது எழுந்து நடந்து வருகிறாா். அவரது விரைவில் குணமடைவதற்காக நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.

குறுக்கெழுத்துப் போட்டியிலும் திரைப்படங்களை ரசிப்பதிலும் பிரதமா் பொழுதைக் கழித்து வருகிறாா்.

எனினும், அவரது உடல் நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கவனித்து வருகின்றனா். தனக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளா்களுக்கு பிரதமா் நன்றி தெரிவித்தாா். மேலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்து அவா் கவலை தெரிவித்தாா் என்று பிரதமா் அலுவலக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

55 வயதாகும் போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனோ நோய்த்தொற்று இருப்பது இரு வாரங்களுக்கு முன்னா் உறுதிப்படுத்தப்பட்டது. உலகத் தலைவா்களிலேயே முதல் முறையாக அவருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட போரிஸ் ஜான்ஸன், அங்கிருந்தபடியே தனது அலுவல்களை கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாக முதலில்அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், அவருக்கு கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் அதிகமாகி, உடல் நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து, அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டாா். 4 நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலை சீரானதையடுத்து, அவா் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.

இந்த நிலையில், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.