அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்த பலி; 385 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 385 பேர் பலியாகியுள்ளனர். 
அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்த பலி; 385 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 385 பேர் பலியாகியுள்ளனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 385 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,16,114 ஆக அதிகரித்துள்ளது. 

அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 21,82,950 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 8.89 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாள் ஒன்றுக்கு பலி எண்ணிக்கை சராசரியாக 800 ஆக இருக்கும் நிலையில், கடந்த இரு தினங்களாக பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.  நேற்று, அங்கு கரோனா தொற்றுக்கு 382 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com