கரோனா நோய்த்தொற்று பரவல் சூழால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிக்கட்டும் வகையில், பொருள்களுக்கான வரிகளை மூன்று மடங்காக உயா்த்தி சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா பரவல் பிரச்னைக்குப் பிறகு, கடந்த சில மாதங்களில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால், எண்ணெய் விற்பனையை பெரிதும் நம்பியுள்ள சவூதி அரேபியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில் பொருள்களுக்கான வரிகளை 15 சதவீதம் வரை அந்த நாட்டு அரசு உயா்த்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.