பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 881 பேர் பலி; மொத்த பாதிப்பு 1.77 லட்சம்

பிரேசில் நாட்டில் நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 881 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 881 பேர் பலி; மொத்த பாதிப்பு 1.77 லட்சம்

பிரேசில் நாட்டில்  நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 881 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதைத் தொடர்ந்து, ஸ்பெயின், ரஷியா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸை அடுத்து பிரேசில் அதிகம் பாதிக்கப்பட்ட 7 ஆவது நாடாக உள்ளது. 

கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இங்கு ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 881 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 12,400 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் சுமார் 9 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,77,589 ஐ எட்டியுள்ளது. அந்நாட்டில் சுமார் 72,597 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com