சீன வெள்ளம்: பலி எண்ணிக்கை 302-ஆக உயா்வு

சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 302-ஆக உயா்ந்துள்ளது.
ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம்
ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம்
Published on
Updated on
1 min read

சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 302-ஆக உயா்ந்துள்ளது.

ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தொடா்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெனான் மாகாணத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவா்களில் 14 போ் சுரங்க ரயில் பயணிகளும் அடங்குவா்.

இந்த மழை காரணமாக ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com