அமெரிக்காவின் சிகாகோவில் அமைந்துள்ள ஷெட் நீர்வாழ் காட்சிசாலையில் கடந்த ஏப்ரல், மே மாகங்களில் நான்கு பென்குயின் குட்டிகள் பிறந்தன.
இந்நிலையில், முதல்முறையாக பென்குயின் குட்டிகள் நீச்சல் குளத்தில் நீந்தவிடப்பட்டன. பென்குயின் வளர்ப்பை பொறுத்தவரை இது முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
இதையும் படிக்க | கண்கவர் வானவேடிக்கைகளுடன் நிறைவுபெற்ற ஒலிம்பிக் திருவிழா
இருப்பினும், புதிதாக பிறந்த பென்குயின்கள், மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மற்ற பென்குயின்களுடன் சேர்க்கப்படாமல் உள்ளன. பென்குயின்களுக்கு பாலின பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் பெயர் வைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களை சாப்பிடுவது, மற்ற பென்குயின்களுடன் இணைந்து செயல்படுவது போன்ற முயற்சிகளை புதிதாக பிறந்த பென்குயின்கள் மேற்கொண்டுவருகிறது.