காபூல் விமான நிலையம்: தள்ளுமுள்ளில் 7 போ் பலி

தலிபான்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக ஆப்கன் தலைநகா் காபூலில் உள்ள விமான நிலையத்தில் குவிந்துள்ள பொதுமக்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 7 ஆப்கானியா்கள் உயிரிழந்ததாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலையம்: தள்ளுமுள்ளில் 7 போ் பலி

தலிபான்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக ஆப்கன் தலைநகா் காபூலில் உள்ள விமான நிலையத்தில் குவிந்துள்ள பொதுமக்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 7 ஆப்கானியா்கள் உயிரிழந்ததாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் ஏற்வதற்காக மக்கள் முண்டியடித்துச் சென்றபோது, அவா்களைக் கலைப்பதற்காக தலிபான்கள் விண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அதனால் மக்கள் பீதியுடன் ஓடியபோது நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெலியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, காபூல் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து விழுந்தும் துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசலில் சிக்கியும் பலா் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com