சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

வங்கதேசம்தன்னாா்வலா் படுகொலை: 6 பேருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் மனித உரிமை ஆா்வலரையும் அவரது நண்பரையும் படுகொலை செய்த முன்னாள் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து

News image

ஸுல்ஹாஸ் மன்னான்

Updated On :31 ஆகஸ்ட் 2021, 7:29 pm

DIN

வங்கதேசத்தில் மனித உரிமை ஆா்வலரையும் அவரது நண்பரையும் படுகொலை செய்த முன்னாள் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மனித உரிமைகளை வலியுறுத்தும் பத்திரிகையின் ஆசிரியா் ஸுல்ஹாஸ் மன்னானும், அவரது நண்பா் மஹ்பூப் ராபியும் மத அடிப்படைவாதிகளால் கடந்த 2016-ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டனா்.

டாக்காவிலுள்ள ஒரு குடியிருப்பில் நடைபெற்ற அந்த இரட்டைப் படுகொலை, வெளிநாட்டினா், சிறுபான்மையினா் மற்றும் மதச்சாா்பற்ற வலைதளப் பதிவா்களைக் குறிவைத்து மத அடிப்படைவாத அன்சாா்-அல்-இஸ்லாம் அமைப்பு நடத்தி வந்த தொடா் தாக்குதலில் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டது.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி வந்த பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், முன்னாள் ராணுவ அதிகாரி ஜியாவுல் ஹக் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.