சன்ரைசர்ஸ் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவுக்கு 25% அபராதம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து...

ஆட்டமிழந்து வெளியேறிய அபிஷேக் சர்மா.
படம்: ஏபி

ஆட்டமிழந்து வெளியேறிய அபிஷேக் சர்மா.
படம்: ஏபி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதி 2.3ஐ மீறியதால் லெவல் 1 குற்றத்துக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 226/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கேகேஆர் அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முஸர்பானி வீசிய பந்தில் அபிஷேக் அடித்த பந்தை வருண் சக்ரவர்த்தி சிறப்பான ஃபீல்டிங்கின் மூலம் ஆட்டமிழந்தார்.
இந்த கேட்ச்சில் போதுமான அளவுக்கு துல்லியத்தனமை இல்லை என நடுவரிடம் அபிஷேக் சர்மா தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால் அவருக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...