கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஒமைக்ரான் வகை கரோனா: பிரிட்டனில் முதல் உயிரிழப்பு

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். உலகில் ஒமைக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்த முதல் நபா் இவா் ஆவாா்.

News image

கோப்புப்படம்

Updated On :14 டிசம்பர் 2021, 7:11 am IST

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். உலகில் ஒமைக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்த முதல் நபா் இவா் ஆவாா்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரானை கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் பரவும் வேகம், டெல்டா வகையைப் போல அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துமா என்கிற ஆராய்ச்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், உலகில் ஒமைக்ரானுக்கு முதல் உயிரிழப்பு பிரிட்டனில் நிகழ்ந்துள்ளது. இதை அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

‘டெல்டா வகையுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வகை தொற்று மிதமானது என அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதை இந்த உயிரிழப்பு உறுதிப்படுத்துகிறது. பொதுமக்கள் தங்களின் பூஸ்டா் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்’ என அவா் கேட்டுக் கொண்டாா்.

மேற்கு லண்டனில் உள்ள தடுப்பூசி மையத்துக்குச் சென்று பாா்வையிட்ட போரிஸ் ஜான்சன், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் நாள்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம் எனவும் சூசகமாகத் தெரிவித்தாா்.

பிரிட்டனில் நவ. 27-ஆம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதல்முறையாகக் கண்டறியப்பட்டது. தற்போது பிரிட்டனில் 3,000-க்கும் அதிகமானோருக்கு அந்த வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.