ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பிரிட்டனில் கரோனா விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பிரிட்டனில் கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலர் எச்சரித்துள்ளார்.

News image

பிரிட்டனில் கரோனா விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Updated On :10 பிப்ரவரி 2021, 12:00 pm

பிரிட்டனில் கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலர் எச்சரித்துள்ளார்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரிட்டன் சுகாதார செயலர் மாட் ஹான்காக் எச்சரித்துள்ளார். 

கரோனா தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ள ஹான்காக் புதிய கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிவப்பு பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள 33 நாடுகளில் இருந்து வருவதை மறைக்கும் பயணிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். 

பிரிட்டனில் இதுவரை 39 லட்சத்து 72 ஆயிரத்து 148 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.